தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி,

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பழனி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார். தலைவர் ஹக்கீம் சேக் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைசெயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் ஜேசுதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story