தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 26 Sep 2018 10:30 PM GMT (Updated: 26 Sep 2018 7:22 PM GMT)

பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தி.மு.க.வை கண்டித்து பொதுக்கூட்டம் புதிய பஸ் நிலைய திடலில் நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தி.மு.க.வை கண்டித்து பொதுக்கூட்டம் புதிய பஸ் நிலைய திடலில் நடந்தது. மாவட்ட கழக அவைத்தலைவர் துரை தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ராணி வரவேற்றார். அண்ணா தொழிற்சங்க பேரவையின் கன்வீனர் ஜக்கையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும். தி.மு.க. கூட்டணி இல்லாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியுமா? எங்களை போன்று தனித்து போட்டியிட நீங்கள் தயாரா?. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் இலங்கைவாழ் தமிழர்களுக்கு தங்களது வாழ்நாள் வரை உதவிகள் புரிந்தனர். ஆனால் இலங்கை தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களது அழிவிற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. அதிக எண்ணிக்கை கொண்ட கருணாநிதி குடும்பத்தினர் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் களை குவித்து வைத்துள்ளனர் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் புலவர் செங்குட்டுவன், தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் ஜெயபிரகாஷ், மருதராஜா எம்.பி., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசாராம் உள்பட பலர் பேசினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story