வலங்கைமான் அருகே: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி - அரசு பஸ் மோதியது


வலங்கைமான் அருகே: மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி - அரசு பஸ் மோதியது
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 7:43 PM GMT)

வலங்கைமான் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.

வலங்கைமான், 


திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் அருகே உள்ள கீழஅமராவதியை சேர்ந்தவர் வேல்ராஜ். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர், சம்பவத்தன்று இரவு ஆலங்குடியில் நடந்த காய்கறி சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருவோணமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது கும்பகோணத்தில் இருந்து திருத் துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ் குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story