திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ - கலெக்டர் கே.ராஜாமணி நாளை வழங்குகிறார்


திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ - கலெக்டர் கே.ராஜாமணி நாளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:30 PM GMT (Updated: 27 Nov 2018 11:30 PM GMT)

திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கும் கல்வி நிதியை, கலெக்டர் கே.ராஜாமணி நாளை வழங்குகிறார்.

திருச்சி,

தினத்தந்தி வழங்கும் ‘கல்வி நிதி’ பெற தகுதி பெற்றுள்ள திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 30 மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா நாளை (வியாழக்கிழமை) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி கல்வி நிதியை வழங்குகிறார்.

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது.

மேலும் மாணவர் பரிசு திட்டத்தின்படி மாவட்டந்தோறும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு மற்றும் தினத்தந்தியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2014-15-ம் கல்வி ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்கு வசதியாக தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் தமிழகம், புதுச்சேரியில் 340 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 2017-18-ம் கல்வி ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தி கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 10 மாணவ- மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-


1) எஸ்.கே. கனிஷ்கா, அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி.

2) எஸ். இலக்கியா, ராஜ் வித்யா பவன் பெண்கள் மெட்ரிக் பள்ளி, துறையூர்.

3) எம். துர்காதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர்.

4) கே. சாருமதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டாத்தூர்.

5) எஸ். அபிதா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்.

6) ஜி. ராஜ்குமார், ஸ்ரீகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை.

7) ஏ. சுருதி, முல்லை மேல்நிலைப்பள்ளி, பாலசமுத்திரம்.

8) எஸ் சந்துரு, எஸ்.வி.வி. மேல்நிலைப்பள்ளி, வைரி செட்டிப்பாளையம்.

9) பி. இந்துமதி, சேவை சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெட்டவாய்த்தலை.

10) வி. ஆனந்தகுமாரி, ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.



கரூர் மாவட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தி கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 10 மாணவ- மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1) கே.மலர்விழி, அரசு மேல்நிலைப்பள்ளி, லாலாப்பேட்டை.

2) எஸ். ஷாலினி, அரசு மேல்நிலைப்பள்ளி, குளித்தலை.

3) டி. லோகேஸ்வரி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி.

4) ஆர்.ஜீவிதா, அரசு மேல்நிலைப்பள்ளி, தோகைமலை.

5) எஸ். திவாகர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.டி.மலை.

6) வி. ரம்யா, செயின்ட் டோம்னிக் சேவியோ மெட்ரிக் பள்ளி, கரூர்.

7) என். கல்பனா, அரசு மேல்நிலைப்பள்ளி, பாலவிடுதி.

8) டி.சுஷ்மிதா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை.

9) ஆர். ரம்யஜா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி.

10) டி.ஹரிணி, அரசு மேல்நிலைப்பள்ளி, கடவூர்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் தினத்தந்தி கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 10 மாணவ- மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1) எஸ். புனிதா, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னன் விடுதி.

2) பி. புவனேஸ்வரி, அருள்மாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

3) கே.கலையரசி, அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

4) டி.மதுப்பிரியா, அரசு மேல்நிலைப்பள்ளி, கொடும்பாளூர்.

5) எஸ். ஆஷா, அரசு மேல்நிலைப்பள்ளி, மறமடக்கி.

6) ஜி..கார்த்திக், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி.

7) எஸ்.சக்தி, எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை,

8) பி.நந்தினி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி.

9) எஸ். பாலமுருகன், அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம்.

10) எம்.கணேஷ்ராம், ரீனா மெர்சி மெட்ரிக் பள்ளி, கறம்பக்குடி.

இந்த மாணவ-மாணவிகளுக்கு தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதிக்கான வரைவோலைகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.ராமகிருஷ்ணன், லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஆர். அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முன்னதாக திருச்சி தினத்தந்தி மேலாளர் எஸ்.ஆர். சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார். முடிவில் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ். ஆரோக்கியமேரி நன்றி கூறுகிறார்.



Next Story