காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2019 10:43 PM GMT (Updated: 22 March 2019 10:43 PM GMT)

காவேரிப்பட்டணம் அருகே காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னப்பள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இவருடைய மகள் சத்யா(வயது21). இவர் முட்டக்கண்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அருள்(26) என்பவரை காதலித்து கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தியடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த சத்யாவை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

Next Story