மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து உணவு, தண்ணீர் தேடி விளைநிலங்களுக்குள் புகும் வன விலங்குகள்
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி விளை நிலங்களுக்குள் புகும் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கம்பம்,
மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கம்பம், புதுக்குளம், மணிக்கட்டி ஆலமரம், ஏகலூத்து போன்ற பகுதியில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மொச்சை, அவரை, மா, கொட்டை முந்திரி மற்றும் நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் போதிய அளவு மழை பெய்யாததால் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விலங்குகள் வனப்பகுதியையொட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் செடிகள், மரங்களை சேதப்படுத்துகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது என அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே வனவிலங்குகளிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க வனப்பகுதியையொட்டி சோலார் மின்வேலியோ, அகழியோ அமைத்து தரவேண்டும் என்றும், வனப்பகுதியில் தற்காலிகமாக தண்ணீர் தொட்டிகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story