வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் தேர்வு


வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் தேர்வு
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 8:59 PM GMT)

வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களை, 3-ம் கட்ட சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களை, 3-ம் கட்ட சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஹர்பிரீத் சிங் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் தாசில்தார் திருமலை உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story