பரங்கிப்பேட்டை அருகே, வெள்ளாற்றில் தவறி விழுந்து மீனவர் பலி - சேற்றில் கால்கள் சிக்கியதால் பரிதாபம்


பரங்கிப்பேட்டை அருகே, வெள்ளாற்றில் தவறி விழுந்து மீனவர் பலி - சேற்றில் கால்கள் சிக்கியதால் பரிதாபம்
x
தினத்தந்தி 28 April 2019 9:45 PM GMT (Updated: 28 April 2019 11:15 PM GMT)

பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றில் தவறி விழுந்த மீனவர் கால்கள் சேற்றில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம்புதுப்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் முருகன் (வயது 45), மீனவர். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். அங்கு அவர் தோணியில் நின்றபடி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது முருகன் எதிர்பாராதவிதமாக தோணியில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.

இதில் அவரது கால்கள் சேற்றில் சிக்கியது. இதனால் அவரால் நீந்தி வெளியே வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே பலியான முருகன் உடல் கரை ஒதுங்கியது. பின்னர் அவரது உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story