ஈரோடு மாவட்ட நல்லாசிரியர்கள் 13 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது; சென்னையில் நடைபெறும் விழாவில் பெறுகிறார்கள்


ஈரோடு மாவட்ட நல்லாசிரியர்கள் 13 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது; சென்னையில் நடைபெறும் விழாவில் பெறுகிறார்கள்
x
தினத்தந்தி 3 Sep 2019 10:45 PM GMT (Updated: 3 Sep 2019 9:41 PM GMT)

ஈரோடு மாவட்ட நல்லாசிரியர்கள் 13 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை சென்னையில் நடைபெறும் விழாவில் பெறுகிறார்கள்.

ஈரோடு,

தேசிய ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் மாநில அளவில் மாநில நல்லாசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி வைரவிழா பள்ளிக்கூட ஆசிரியர் மன்சூர் அலி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்று உள்ளார்.

இதுபோல் மாநில அளவிலான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரிய-ஆசிரியைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரிய-ஆசிரியைகள் விவரம் வருமாறு:-

1. ம.பாலசுப்பிரமணியம், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பி.கரட்டுப்பாளையம், கோபி.

2. பெ.ரெங்கநாயகி, தலைமை ஆசிரியை, சக்தி மேல்நிலைப்பள்ளி, நாச்சிமுத்துபுரம், அந்தியூர்.

3. ந.மா.சாந்தி, தலைமை ஆசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வேமாண்டம்பாளையம், நம்பியூர்.

4. அ.கதிர்வேல், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிக்கோவில்.

5. கே.எஸ்.புருஷோத்தமன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பொலவக்காளிபாளையம், கோபி.

6. ஆ.வைரமூர்த்தி, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம், மொடக்குறிச்சி.

7. சி.பிரமிளா, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருந்தேவன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி.

8. வெ.ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்துறை (கிழக்கு).

9. ந.சித்ரா, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோடேபாளையம், பவானிசாகர்.

10. பெ.உமாதேவி, தலைமை ஆசிரியை, மன்னாதம்பாளையம், நஞ்சை காளமங்கலம், மொடக்குறிச்சி.

11. இ.அமலநாத், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொங்கர்பாளையம்.

12. வீ.சரஸ்வதி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளிபாளையம், நசியனூர்.

13. சு.வை ஜெயந்தி, முதல்வர் பி.கே.பி.சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்யாணிபுரம்.

மேற்கண்ட 13 ஆசிரிய- ஆசிரியைகள் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

இவர்கள் நாளை (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுகிறார்கள்.

விருது பெற்றவர்களில் 12 பேர் அரசு பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியைகளாக பணியாற்றி வருகிறார்கள். ஒருவர் தனியார் பள்ளக்கூட முதல்வராக உள்ளார்.

13 பேரில் 5 பேர் ஆசிரியர்கள், 8 பேர் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்று ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த ஆசிரிய-ஆசிரியைகளுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி பாராட்டு தெரிவித்தார்.

Next Story