சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 10:45 PM GMT (Updated: 15 Oct 2019 6:47 PM GMT)

சீர்காழி பகுதியில் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி,

சீர்காழி பகுதியில் பொறைவாய்க்கால் செல்கிறது. இதன் மூலம் திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையாறு, ராதாநல்லூர், தாழந்தொண்டி, வழுதலைக்குடி, வருசபத்து, எடமணல், ஆமப்பள்ளம், கடவாசல், வடகால், விநாயகக்குடி, செம்மங்குடி, விளந்திடசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் நாற்று விட்டு நடுவதற்கு பதிலாக நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இந்த ஆண்டும் வாய்க்காலில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். தற்போது நெற்பயிர்கள் சிறிது வளர்ந்துள்ளது.

தண்ணீர் திறந்துவிட வேண்டும்

ஆனால் மழை பெய்யாததாலும், பொறை வாய்க்காலில் தண்ணீர் செல்லாததாலும் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே பொதுப்பணி துறையினர் பொறைவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு கருகும் நிலையில் உள்ள சம்பா நேரடி நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story