மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 Oct 2019 10:15 PM GMT (Updated: 31 Oct 2019 6:53 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தளி, 

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு பாம்பாறு, தேனாறு, சின்னாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப் படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பை பொறுத்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த பயணத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கரின் பாசன தேவையையும் நூற்றுக் கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

இந்த சூழலில் ஆகஸ்டு மாதம் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழை யும் பெய்து வந்தது. இதனால் அமராவதி அணையின் நீராதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்டவற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. ஆனால் அமராவதி அணையின் பாசன பரப்புகளில் பெரிதள வில் மழை பெய்யவில்லை.

அதை தொடர்ந்து கடந்த மாதம் 20-ந் தேதி அமராவதி அணையில் இருந்து புதிய மற்்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் பின்னர் விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது அமராவதி கல்லாபுரம், ராமகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு சுமார் 600 கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து வந்தது. தற்போது 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக அமராவதி அணைப்பகுதியில் வெப்பத் தின் தாக்குதல் குறைந்து விட்டது. அத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவி வருகிறது. மேலும் கேரளாவில் அவ்வப்போது மழைபெய்து வருவதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப் படுவதாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கு அதிகள வில் நீர்வரத்து ஏற்படுவதற் கான வாய்ப்புகள் நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,038 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையி லிருந்து வினாடிக்கு அமரா வதி ஆற்றில் 605 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் பட்டது.

Next Story