சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு + "||" + Opening of water from Cholavaram Lake to Pulchel Lake for Chennai Drinking Water
சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
செங்குன்றம்,
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் உள்ளன.
இதில் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 233 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோழவரம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்தம் 10 மதகுகள் உள்ள நிலையில், அங்கு 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரிக்கு திறப்பு
தற்போது சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீரின் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். தற்போது தண்ணீர் இருப்பு 932 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக அங்கு இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை தூக்கி சென்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் ரத்னா சம்பந்தப்பட்ட கழுவந்தோண்டி நைனார் ஏரியை ஆய்வு செய்து, ஏரிகரையில் விரைவில் சாலை அமைத்துதரப்படும் என்று கூறினார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கரூர் அருகேயுள்ள செட்டிப்பாளையம் அணையிலிருந்து விவசாய பணிகளுக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளது. அணை நிரம்பிய நிலையில் கடல்போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.