நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்


நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்
x
தினத்தந்தி 11 May 2020 3:29 AM GMT (Updated: 11 May 2020 3:29 AM GMT)

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் வாகன சோதனை மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல அறிவுறுத்தினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி மோட்டார் சைக்கிள், மொபட், ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது ஆங்காங்கே போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் ரெங்கர் சன்னதி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மெகராஜ் திடீரென பிரதான சாலையில் தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவர் மோட்டார் சைக்கிள்களில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் நபர்களை இறக்கிவிட்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story