பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தொட்டது: அரியலூரில் மேலும் 27 பேருக்கு தொற்று


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தொட்டது: அரியலூரில் மேலும் 27 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 12 Oct 2020 11:44 PM GMT (Updated: 12 Oct 2020 11:44 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தொட்டது. அரியலூரில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் வட்டாரத்தில் நேற்று 3 பேரும், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1,886 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 416 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 27 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,129 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 3,279 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 44 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 990 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 63 ஆயிரத்து 914 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Next Story