விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது


விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2020 9:50 PM GMT (Updated: 23 Oct 2020 9:50 PM GMT)

விஜயாப்புராவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 50 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு.

விஜயாப்புரா, 

விஜயாப்புரா (மாவட்டம்) டவுன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில்அவர்கள் மவுனேஷ் படிகேரா (வயது 28), நிங்கப்பா பூஜார் (38), மீராஷாப் பளிகார் (24), மெகபூப் பளிகார் (28) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் விஜயாப்புரா டவுன், புறநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் வீடுகள், வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிளை திருடுவார்கள். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை 4 பேரும் ஆடம்பரமாக செலவு செய்தது தெரியவந்தது.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு இவ்வாறு திருட்டு சம்பவங்களில் 4 பேரும் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான 4 பேரும் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு பகுதிகளில் திருடிய 50 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேர் மீதும் விஜயாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story