தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேருக்கு கொரோனா


தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Jan 2021 2:42 AM GMT (Updated: 3 Jan 2021 2:42 AM GMT)

தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் புதிதாக 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 314 ஆக உயர்ந்தது.

இதில் 14 ஆயிரத்து 985 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது கொரோனாவுக்கு 118 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனாவால் 211 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி- தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 277 ஆக உயர்ந்தது. இவர்களில் 8 ஆயிரத்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது 49 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 158 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 92 ஆக அதிகரித்தது. இதில் 15 ஆயிரத்து 867 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 84 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.

Next Story