தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி; தாய் கண் முன்னே பரிதாபம்


தங்கபாண்டியன்
x
தங்கபாண்டியன்
தினத்தந்தி 5 Jan 2021 2:42 AM GMT (Updated: 5 Jan 2021 2:42 AM GMT)

கடையநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

வாலிபர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பசும்பொன் தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் தங்கப்பாண்டியன் (வயது 18). இவர்கள் கருப்பாநதி அணை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விளைநிலங்களில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது அங்கே நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதம் செய்வதால் வனவிலங்குகள் சேதம் செய்வதை தடுக்கும் விதத்தில் விளை நிலங்களை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி பலி
சம்பவத்தன்று இரவு தன் தாயை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றார். மின்வேலியில் மின்சாரத்தை பாய்ச்சும்போது எதிர்பாராதவிதமாக தாய் கண் முன்னே மகன் தங்கப்பாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், மகன் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்ததும் உடனடியாக உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்க தங்கப்பாண்டி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

தங்கப்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை 
நடத்தி வருகின்றனர்.

Next Story