5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:58 PM GMT (Updated: 23 Feb 2021 12:58 PM GMT)

5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சேம்பர்களை உடனடியாக திறக்கவேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் வக்கீல் தம்பதியை படுகொலை செய்த குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு வக்கீல் பாதுகாப்பு சட்டங்களை இயற்ற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story