திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 28 Feb 2021 12:28 AM GMT (Updated: 28 Feb 2021 12:28 AM GMT)

பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா 26-ந்தேதி தொடங்கியது. அன்று மாலையில் சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை, பெண்கள் பங்கேற்ற 501 திருவிளக்கு பூஜை நடந்தது.

2-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் பக்தர்கள் குற்றால தீர்த்தம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து வில்லிசை, சிறப்பு பூஜை, வாணவேடிக்கை நடந்தது.

Next Story