தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Feb 2021 5:54 PM GMT (Updated: 28 Feb 2021 5:54 PM GMT)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் 
கரூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நல்லம்மாள் மனமுடைந்து தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story