செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 8 March 2021 2:29 AM GMT (Updated: 8 March 2021 2:29 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 114-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 786 பேர் உயிரிழந்துள்ளனர். 309 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 501 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

184 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 700 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 91 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 449 பேர் உயிரிழந்துள்ளனர். 108 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


Next Story