மது குடித்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை


மது குடித்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2021 7:47 PM GMT (Updated: 9 March 2021 7:47 PM GMT)

மது குடித்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த எசனையை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வீரமணி (வயது 32). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். வீரமணிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த வீரமணியை, அவர் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த வீரமணி கடந்த 6-ந்தேதி மதுவுடன் பூச்சி மருந்து(விஷம்) குடித்துவிட்டு, விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக வீரமணியை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரமணி, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வீரமணியின் தங்கை சந்தியா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story