தனியார் நிறுவன ஊழியர் பலி


தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 29 March 2021 7:59 PM GMT (Updated: 29 March 2021 7:59 PM GMT)

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருமங்கலம், 
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38).திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.முருகேசன் மறவன்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ரோட்டில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேஸ்வரன் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார்சைக்கிளை திருப்ப முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த முருகேசுவரன் படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story