தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவில் குண்டம் விழா பூசாரி மட்டும் தீ மிதித்தார்


தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவில் குண்டம் விழா பூசாரி மட்டும் தீ மிதித்தார்
x
தினத்தந்தி 29 March 2021 9:25 PM GMT (Updated: 29 March 2021 9:25 PM GMT)

தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார்.

தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார்.
குண்டம் விழா
தாளவாடி அடுத்துள்ள நெய்தாளபுரம் கிராமத்தில் தொட்டம்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேள தாளத்துடன் சாமி ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் தொட்டம்தாய் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்மன் குளத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பூஜை நடந்தது.
பூசாரி தீ மிதித்தார்
அதைத்தொடர்ந்து நேற்று காலை குளத்தில் இருந்து அம்மன் கோவிலை வந்தடைந்தார். பின்னர் 7 மணி அளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டம் பற்ற வைக்கப்பட்டது. அதன்பின்னர் கோவில் பூசாரி சிக்குமாதய்யா மட்டும் தீ மிதித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், “அம்மா தாயே” என பக்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர்.

Next Story