சேலத்தில் பறக்கும் படையினர் சோதனை: வேனில் கொண்டு சென்ற ரூ.35.72 லட்சம் பறிமுதல்


சேலத்தில் பறக்கும் படையினர் சோதனை: வேனில் கொண்டு சென்ற ரூ.35.72 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2021 11:32 PM GMT (Updated: 29 March 2021 11:32 PM GMT)

வேனில் கொண்டு சென்ற ரூ.35.72 லட்சம் பறிமுதல்

சேலம்:
சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வேனில் கொண்டு சென்ற ரூ.35.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் பறக்கும் படை
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் சேலத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சிவக்குமார் தலைமையில் அலுவலர்கள் செவ்வாய்பேட்டை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பண்டல், பண்டலாக ரூ.35 லட்சத்து 72 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து அந்த வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஒரு தனியார் வங்கி சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு கொடு்த்த கடன் தொகைகளை வசூலித்து வந்து உள்ளோம். இந்த பணத்தை 4 ரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் கிளை அலுவலகத்திற்கு கொண்டு செல்கிறோம், என்று கூறினர்.
ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்று கூறி ரூ.35 லட்சத்து 72 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறனிடம் ஒப்படைத்தனர்.

Next Story