விபத்தில் வாலிபர் இறந்தார்


விபத்தில் வாலிபர் இறந்தார்
x
தினத்தந்தி 30 March 2021 6:20 PM GMT (Updated: 30 March 2021 6:20 PM GMT)

விபத்தில் வாலிபர் இறந்தார்

ராமநாதபுரம்
பாம்பன் சந்திரதெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 31). பாம்பன் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரத்தில் உள்ள ஸ்டூடியோவிற்கு வந்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கு ரோடு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் திருவரங்கம் முருகேசன்(51) என்பவரை தேடிவருகின்றனர்.

Next Story