முதியவரிடம் நகை பறிப்பு
![முதியவரிடம் நகை பறிப்பு முதியவரிடம் நகை பறிப்பு](https://img.dailythanthi.com/Articles/2021/Mar/202103310226013815_Jewelry-flush-with-the-elderly_SECVPF.gif)
x
தினத்தந்தி 30 March 2021 8:56 PM GMT (Updated: 30 March 2021 8:56 PM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
முதியவரிடம் நகை பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 72). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் வீட்டிற்குள் புகுந்து குமாரவேலை எழுப்பினார்கள். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)