வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2021 9:03 PM GMT (Updated: 30 March 2021 9:03 PM GMT)

சாத்தூர் அருகே வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சாத்தூர், 
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரமூர்த்தி பட்டி பஸ் நிறுத்தம் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, சாத்தூர் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் வெங்கடேஷ், துணை தாசில்தார் ராஜாமணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story