கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது


கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 8:16 PM GMT (Updated: 29 April 2021 8:16 PM GMT)

கடையநல்லூரில் கோழிப்பண்ணையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர், ஏப்:
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரில் முகைதீன் (வயது 80) என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கோழிப்பண்ணையில் இருந்த 3 மூட்டை கோழி தீவனத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கோழி தீவனத்தை திருடியதாக அதே பண்ணையில் வேலை பார்த்த மாரியப்பன் (42), வேலுசாமி (44) ஆகியோரை கைது செய்தனர். 

Next Story