வைரஸ் தொற்றுக்கு 217 பேர் பலி கர்நாடகத்தில் புதிதாக 37,733 பேருக்கு கொரோனா


வைரஸ் தொற்றுக்கு 217 பேர் பலி கர்நாடகத்தில் புதிதாக 37,733 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2021 10:28 AM GMT (Updated: 3 May 2021 10:28 AM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 37,733 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 58 ஆயிரத்து 365 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 37,733 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை

16 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 21,149 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 64 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 21,199 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகல்கோட்டையில் 691 பேர், பல்லாரியில் 1,156 பேர், பெலகாவியில் 372 பேர், பெங்களூரு புறநகரில் 286 பேர், பீதரில் 584 பேர், சாம்ராஜ்நகரில் 271 பேர், சிக்பள்ளாப்பூரில் 446 பேர், சிக்கமகளூருவில் 166 பேர், சித்ரதுர்காவில் 152 பேர், தட்சிண கன்னடாவில் 996 பேர், தாவணகெரேயில் 317 பேர், தார்வாரில் 741 பேர், கதக்கில் 118 பேர், ஹாசனில் 792 பேர், ஹாவேரியில் 157 பேர், கலபுரகியில் 427 பேர், குடகில் 246 பேர், கோலாரில் 282 பேர், கொப்பலில் 567 பேர், மண்டியாவில் 653 பேர், மைசூருவில் 2,529 பேர், ராய்ச்சூரில் 445 பேர், ராமநகரில் 441 பேர், சிவமொக்காவில் 620 பேர், துமகூருவில் 1,302 பேர், உடுப்பியில் 413 பேர், உத்தர கன்னடாவில் 538 பேர், விஜயாப்புராவில் 303 பேர், யாதகிரியில் 302 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 64 பேரும், பல்லாரியில் 18 பேரும், சாம்ராஜ்நகரில் 15 பேரும், துமகூருவில் 13 பேரும், சிவமொக்காவில் 12 பேரும், ஹாசனில் 11 பேரும், ராமநகரில் 8 பேரும், உத்தரகன்னடா, கலபுரகியில் தலா 7 பேரும், பீதரில் 6 பேரும், பெங்களூரு புறநகர், கோலார், கொப்பல், மண்டியாவில் தலா 5 பேரும், ஹாவேரியில் 4 பேரும், சிக்பள்ளாப்பூர், தார்வார், விஜயாப்புராவில் தலா 3 பேரும், பெலகாவி, சிக்கமகளூரு, தாவணகெரே, குடகு, ராய்ச்சூர், உடுப்பியில் தலா 2 பேரும் என மொத்தம் 217 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story