விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1010 பேருக்கு கொரோனா தொற்று 3 பேர் சாவு


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1010 பேருக்கு கொரோனா தொற்று 3 பேர் சாவு
x
தினத்தந்தி 17 May 2021 4:37 PM GMT (Updated: 17 May 2021 4:37 PM GMT)

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 25610 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று பலரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 488 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,098 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 62 வயது முதியவர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சியை சேர்ந்த 67 வயதுடைய முதியவர், திருக்கோவிலூரை சேர்ந்த 71 வயதுடைய மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனவுக்கு மொத்தம் 157 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 417 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 22,600 ஆகும். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 ஆயிரத்து 480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 900 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது.

இதில் புதிய உச்ச மாக நேற்று ஒரே நாளில் 522 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 324-ல் இருந்து 15 ஆயிரத்து 846-ஆக உயர்ந்துள்ளது.

Next Story