திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,791 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,791 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 21 May 2021 4:53 AM GMT (Updated: 21 May 2021 4:53 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,791 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 1,791 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 88 ஆயிரத்து 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 75 ஆயிரத்து 197 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 11,797 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,101 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 20 பேர் இறந்துள்ளனர்.

Next Story