கூடலூரில் ‘ட்ரோன்’ மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு
![கூடலூரில் ‘ட்ரோன்’ மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு கூடலூரில் ‘ட்ரோன்’ மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு](https://img.dailythanthi.com/Articles/2021/May/202105282248287203_Intensive-police-surveillance-by-drone-in-Cuddalore_SECVPF.gif)
கூடலூரில் ‘ட்ரோன்’ மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
கூடலூர்,
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள மைதானங்களில் வாலிபர்கள் கூட்டமாக திரண்டு விளையாடுகின்றனர். இதன் மூலம் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது.
இதையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
மேலும் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது காசிம்வயல், செம்பாலா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மைதானங்களில் விளையாடிய வாலிபர்கள் தலைதெறிக்க சிதறி ஓடினர்.
Related Tags :
Next Story