டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 May 2021 5:51 PM GMT (Updated: 28 May 2021 5:51 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 டாஸ்மாக் ஊழியர்
ராஜாக்கமங்கலம் அருகே பிள்ளையார்விளையை சேர்ந்தவர் தீஸ்மாஸ் (வயது 47), டாஸ்மாக் ஊழியர். இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை
 இதனால் மனமுடைந்த தீஸ்மாஸ் வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
பின்னர், இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தீஸ்மாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story