தென்காசியில் கொரோனாவுக்கு 10 பேர் பலி


தென்காசியில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2021 8:34 PM GMT (Updated: 8 Jun 2021 8:34 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்.

தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் இறந்தனர். 
மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 21  ஆயிரத்து 214 பேர் வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 935 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 397 பேர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக வீடுகள்தோறும் பரிசோதனை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Next Story