கொள்ளிடம் அருகே, விஷம் குடித்து வேளாண் அலுவலக தற்காலிக ஊழியர் தற்கொலை


கொள்ளிடம் அருகே, விஷம் குடித்து வேளாண் அலுவலக தற்காலிக ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 9 July 2021 12:54 PM GMT (Updated: 9 July 2021 12:54 PM GMT)

கொள்ளிடம் அருகே வேளாண் அலுவலக தற்காலிக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடம், 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி ஊராட்சி கேவரோடை கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது38). இவர் கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தற்காலிக தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வேட்டங்குடி கிராமத்தில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டுக்குள் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் அங்கு சென்று சுபாஷின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story