புதுச்சேரியில் புதிதாக 107 பேருக்கு கொரோனா பாதிப்பு


புதுச்சேரியில் புதிதாக 107 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2021 9:58 AM GMT (Updated: 16 Sep 2021 9:58 AM GMT)

புதுச்சேரியில் தற்போது 963 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 60 பேருக்கும், காரைக்காலில் 34 பேருக்கும், மாஹேவில் 9 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,170 ஆக உயர்ந்துள்ளது. 

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,827 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,380 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 963 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story