பெண்ணை மிரட்டியவர் கைது


பெண்ணை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 30 Sep 2021 7:26 PM GMT (Updated: 30 Sep 2021 7:26 PM GMT)

பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

பனவடலிசத்திரம்:
தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 36). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே ஊரைச் சேர்ந்த பால்முத்தையா (42) என்பவர் தண்ணீர் பாட்டில் வாங்கினார். அந்த தண்ணீர் பாட்டிலுக்கு மகாலட்சுமி பணம் கேட்டார். அப்போது பால்முத்தையா, மகாலட்சுமியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில், தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்முத்தையாவை கைது செய்தனர்.

Related Tags :
Next Story