பணம் பறித்த 2 பேர் கைது


பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2021 8:22 PM GMT (Updated: 1 Oct 2021 8:22 PM GMT)

சிவகாசியில் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 25). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேரு காலனியில் உள்ள சுடுகாடு அருகே சென்ற போது அங்கு இருந்த ஜமீன் சல்வார்பட்டியை சேர்ந்த வீராஈஸ்வரன் (29), முனியசாமி (25) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி காளிராஜ் சட்டை பையில் இருந்து ரூ.370-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காளிராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story