புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Oct 2021 5:24 PM GMT (Updated: 2 Oct 2021 5:24 PM GMT)

புரட்டாசி மாத 3 வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மபுரி:
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, உபசார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
காரிமங்கலம் அருகே மலை மீதுள்ள சஞ்சீவிராயன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது. இதேபோல் காரிமங்கலம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், மோதூர் பெருமாள் கோவில், பிக்கனஅள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை பூதேவி, ஸ்ரீதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கடரமண சாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில், செட்டிகரை பெருமாள் கோவில், மூக்கனூர், அக்கமனஅள்ளி ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
இதேபோன்று அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மிக்கனஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே கோபுரம் மற்றும் கொடி மரத்தை வழிபட்டு சென்றனர்.

Next Story