வாலிபர் போக்சோவில் கைது


வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 3 Oct 2021 2:09 PM GMT (Updated: 3 Oct 2021 2:09 PM GMT)

வாலிபர் போக்சோவில் கைது

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்து என்ற நந்தகோபால்(வயது 29). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் ஆசை வார்த்தை கூறி அவரை திருப்பூருக்கு கடத்தி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் அவர் அங்கேயே வாடகை வீட்டில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நந்தகோபாலை கைது செய்தனர்.

Next Story