மின்னல் தாக்கி பெண் சாவு


மின்னல் தாக்கி பெண் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2021 5:48 PM GMT (Updated: 4 Oct 2021 5:48 PM GMT)

திருமருகல் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திட்டச்சேரி:
திருமருகல் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்னல் தாக்கியது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி அபிஷேக கட்டளை தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி சித்ரா(வயது 46), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி ரேணுகா(35). இவர்கள் இருவரும் நேற்று அம்பல் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை அருகே உள்ள ஒரு வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்ட இருந்தனர். 
மதியம் 1 மணியளவில் அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் வயலில் வேலை செய்து கொண்டு இருந்த சித்ரா, ரேணுகா ஆகிய இருவரும் மழைக்கு ஒதுங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது இருவரையும் மின்னல் தாக்கியது. 
பெண் சாவு
இதில் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரேணுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் அங்கு வந்து சித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story