மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
![மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி](https://img.dailythanthi.com/Articles/2021/Oct/202110050110525870_death_SECVPF.gif)
நின்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கருப்பசாமி பாண்டியன் (வயது 37). விவசாயி. இந்நிலையில் தனது சொந்த வேலையாக அருப்புக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பசாமி பாண்டியன் மீண்டும் அவரது ஊருக்கு திருச்சுழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த மினி டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கருப்பசாமி பாண்டியன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார், கருப்பசாமி பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story