கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது
![கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது](https://www.dailythanthi.com/h-upload/uid/DGx8lFGk6AalCgNwcMNUzB8MCNkCNTVI.jpg)
திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலைவாய்ப்பு, பசுமை வீடுகள், வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள், சமூக பாதுகாப்பு திட்டம், நிலம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 458 மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம், காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வித்யா, தனித் துணை கலெக்டர் ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story