ரேஷன் அரிசி கடத்த முயன்ற முதியவர் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் சாமிநாதபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வேனில் முதியவர் ஒருவர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தார். போலீசார் மூட்டைகளில் சோதனை செய்தபோது, அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 60) என்பதும், ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story