பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2022 5:38 PM GMT (Updated: 24 Jan 2022 5:38 PM GMT)

கோவில்பட்டியில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சண்முகையா மனைவி லட்சுமி (வயது 50). இவர்களது மகள் மஞ்சு (21). லட்சுமியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் லட்சுமி கூலி வேலை செய்து தனது மகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் அப்பகுதியில் உள்ள சிலரிடம் குடும்ப செலவுக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்ட லட்சுமி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மகள் மஞ்சு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story