நிலத்தின் வழியாக மூதாட்டி உடல் எடுத்துச்செல்ல எதிர்ப்பு
![நிலத்தின் வழியாக மூதாட்டி உடல் எடுத்துச்செல்ல எதிர்ப்பு நிலத்தின் வழியாக மூதாட்டி உடல் எடுத்துச்செல்ல எதிர்ப்பு](https://img.dailythanthi.com/Articles/2022/Jan/202201242312214924_Resistance-to-carrying-the-grandmothers-body-through-the_SECVPF.gif)
செய்யாறு அருகே நிலத்தின் வழியாக மூதாட்டி உடல் எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மதுரை கிராம காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி முனியம்மாள் (வயது 63). இவர், உடல்நிலை சரியில்லாமல் நேற்று அதிகாலையில் இறந்தார்.
இதனையடுத்து மூதாட்டியின் உடலை வழக்கமாக கொண்டு செல்லும் விவசாய நிலத்தின் வழியாக கொண்டு செல்ல உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் முற்பட்டதாக தெரிகிறது.
அப்போது விவசாய நிலங்களில் நெற்பயிர் பயிரிட்டு இருந்ததால் நிலத்தின் உரிமையாளர்கள் மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், தாசில்தார் சுமதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடல் நிலத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story