ரூ.20 கோடி நிலத்தை பறிமுதல் செய்ய கலெக்டர் நோட்டீஸ்


ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கலெக்டர் ஆய்வு செய்கிறார்
x
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கலெக்டர் ஆய்வு செய்கிறார்
தினத்தந்தி 25 Jan 2022 5:26 PM GMT (Updated: 25 Jan 2022 5:26 PM GMT)

தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் அரசுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனை பறிமுதல் செய்ய கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தஞ்சாவூர்:-

தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் அரசுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனை பறிமுதல் செய்ய கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

5 ஏக்கர் அரசு நிலம்

தஞ்சை புறவழி சாலையில் பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் 5 ஏக்கர் நிலமும் பல ஆண்டுகளாக அரசு அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அந்த நிலத்தை பறிமுதல் செய்து அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கலெக்டர் நோட்டீசு

இதையடுத்து 5 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்வது குறித்து கலெக்டர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி அந்த நிலத்தை பயன்படுத்திவரும் சோமசுந்தரம் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், அரசின் சொத்தாக இருக்கிற நிலத்தை அனுமதி பெறாமல் தாங்கள் அனுபவித்து கொண்டு வருவது தெரிய வருகிறது. எனவே உங்களை அந்த நிலத்திலிருந்து அப்புறப்படுத்தி அதில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பயிர்கள் விளைச்சல் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதிக்குள் ஆஜராகி சாலியமங்கலம் வருவாய் ஆய்வாளர் அல்லது தாசில்தார் முன் தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.20 கோடி மதிப்பு

ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலம் பட்டுக்கோட்டை மெயின் சாலையின் ஓரத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story