காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கார்த்தீசன் மனைவி காயத்திரி (வயது 21). கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் கார்த்தீசனும், காயத்திரியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு முத்துமகாலெட்சுமி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. கார்த்தீசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தீசனுக்கும், காயத்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காயத்திரி வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டுள்ளார்.
இதனை பார்த்த கார்த்தீசனும், அவரது அண்ணன் முத்துசெல்வமும் காய்த்திரியை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கிருந்து நேற்று காலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story