நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 658 பேருக்கு கொரோனா பெண் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 658 பேருக்கு கொரோனா பெண் பலி
x
தினத்தந்தி 28 Jan 2022 5:39 PM GMT (Updated: 28 Jan 2022 5:39 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 658 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 658 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
658 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 62,741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 36 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலில் இருந்து பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,705 ஆக ஆனது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 658 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,363 ஆக உயர்ந்தது.
ஒருவர் பலி
நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 427 பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர். இதனிடையே இதுவரை கொரோனாவுக்கு 524 பேர் பலியாகி இருந்த நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோக்கலை அருகே உள்ள எளையாம்பாளையத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 525 ஆக ஆனது.
மேலும் இதுவரை 58,055 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 4,783 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story